Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் அன்னாபிஷேகம்

அக்டோபர் 29, 2023 04:30

ராசிபுரம்: ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் ஐப்பசி பௌர்ணமியைமுன்னிட்டு  அன்னாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி  பெளர்ணமியன்று அன்னாபிஷேகம் பரம்பரை அறக்கட்டளைதாரர்களால் நடத்தப்படும். இதனையடுத்து நடைபெற்ற விழாவில் ஸ்ரீகைலாசநாதர் உடனுறை தர்மசம்வர்த்தினி அம்பாளுக்கு வாசனை திரவிய பொருட்களை கொண்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது.

தொடர்ந்து, மூலவரான ஸ்ரீகைலாசநாதர் சுவாமிக்கு அபிஷேகம் நடத்தி அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் சிவாச்சாரியார்கள், அன்னாபிஷேக நிரந்தரக் கட்டளைதாரர் பெப்சி பி.சுரேஷ்குமார் குடும்பத்தினர் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். 

சிவ ஸ்ரீ உமாபதி சிவாச்சாரியார் சிவ ஸ்ரீ ஸ்ரீ மது சிவாச்சாரியார் மற்றும் தட்சிணாமூர்த்தி சிவாச்சாரியார் என கோயில் சிவாச்சாரியார்கள் அன்னாபிஷேக அலங்காரத்தை சிறப்பாக செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்